டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்டிஆர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் நாளை மே 20-ந்தேதி அவரது 38ஆவது பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார் ஜூனியர் என்டிஆர். அதில், என் அன்பான ரசிகர்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது பெரிய நன்றி. உங்கள் செய்திகளையும், வீடியோக்களையும், வாழ்த்துக்களையும் நான் பார்த்திருக்கிறேன். உங்கள் பிரார்த்தனைகள் என்னை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த அன்பிற்காக உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளின்போது நீங்கள் காட்டும் பாசம் உண்மையிலேயே நான் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனபோதிலும் இந்த சவாலான காலகட்டத்தில் நீங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பது தான் எனக்கு கொடுக்கும் மிகப் பெரிய பரிசு. தற்போது நாடு கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் என அனைவருமே தன்னலமற்ற இந்த போரை அயராவது நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்புக்குரியவர்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். அதனால் இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. நமது ஒற்றுமையை காண்பிப்பதற்கான நேரம்.
தயவு செய்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள். கொரோனா வைரஸிற்கு எதிரான போர் முடிந்ததும் நாம் அனைவரும் ஒன்றாக கூடுவோம். கொண்டாடி மகிழ்வோம், ஜெய்ஹிந்த். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜூனியர் என்டிஆர்.




