இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தல் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிப்பதற்காக, முதலில் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகு, அவர் விலகிக்கொள்ள, பாபிசிம்ஹா அதில் நடிப்பதாக பேச்சு அடிபட்டது. இந்தநிலையில் அந்த கதாபாத்திரத்தின் பஹத் பாசில் நடிக்கிறார் என கடந்த மாதம் உறுதியானது.
சில வருடங்களுக்கு முன்பு. ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. இதில் வில்லத்தனம் கொண்ட மோசமான காட்டிலாகா அதிகாரியாக தான் பஹத் பாசில் நடிக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழர்கள், செம்மரக்கடத்தல் என்கிற சர்ச்சை பின்புலத்தில், கதை நகர்வதால் தான், இதில் நடிக்க விரும்பாமல் விஜய்சேதுபதி விலகி கொண்டதாகவும், பஹத் பாசில் மலையாளி என்பதால், அவரை வைத்து, இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து கொள்ளலாம் என்பதால் தான், அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.