லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
பழம்பெரும் தெலுங்கு காமெடி நடிகை பவள சியாமளா. சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2019ல் மதுவடலரா படம் வெளியானது. இதுதான் அவர் நடித்த கடைசி படம்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி இவர் அவதிப்பட்டார். தற்போது அவர் வறுமையில் வாழ்ந்து வருகிறார். அவரது கணவரும் இறந்து விட்டார். ஒரே மகளும் நோய்வாய்பட்டுள்ளார். இதனால் தான் வறுமையில் வாடுவதாகவும், மருந்து வாங்ககூட பணம் இன்றி தான் பெற்ற விருதுகளை விற்று மருந்து வாங்கி வருவதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த தகவலை கேள்பிப்பட்ட சிரஞ்சீவி, பவள சியாமளாவிற்கு 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தின் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். சிரஞ்சீவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.