ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

சிரஞ்சீவி நடிப்பில் கடந்த டிசம்பர் 12ம் தேதி திரைக்கு வந்த படம் மன சங்கர வர பிரசாத் காரு. இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். 200 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 300 கோடி வசூலித்தது. இதையடுத்து சிரஞ்சீவி நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள படம் விஸ்வாம்பரா. திரிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை வசிஷ்டா இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து வசிஷ்டா அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛விஸ்வாம்பரா படத்தில் எட்டு விதமான கெட்டப்புகளில் சிரஞ்சீவியை பார்க்கலாம். ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமேக்ஸ் தனித்துவமாக இருக்கும். கடைசி 20 நிமிடங்கள் பார்வையாளர்களை திகைக்க வைக்கும். அதனால் இப்படத்தின் கிளைமாக்ஸ் சஸ்பென்ஸாக வைத்துள்ளோம்'' என்றார்.




