மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
மறைந்த ராம.நாராயணன் இயக்கத்தில் சீதா நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் ஆடி வெள்ளி. அந்த படத்தின் சென்டிமென்ட் காட்சிகளும், பாம்பு, யானை சீன்களும் தமிழகத்தில் பேசப்பட்டன. இந்த படத்தை ரீமேக் செய்ய முயற்சிக்கிறார் ராம நாராயணன் மகன் முரளி ராமசாமி. சீதா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அதில் 15 கோடி வரை சம்பளம் கேட்டதாலும், மூக்குத்திஅம்மன் 2 படத்தில் பிஸி ஆனதாலும் அவரை நடிக்க வைக்கவில்லை.
இப்போது திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அம்மன் கதையில் நடிக்க வேண்டும் என அவரும் ஆர்வமாக இருக்கிறாராம். இயக்குனர் தேர்வும் நடந்து வருகிறது. திரிஷா ஓகே சொல்லும் பட்சத்தில் வரும் ஆடி வெள்ளியில் இந்த பட அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. மூக்குத்தி அம்மன் 2வில் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சித்தார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால், அது நடக்கவில்லை. கடைசியில் அந்த படம் சுந்தர்.சி இயக்க, நயன்தாரா நடிப்பில் தயாராகிறது. ஆகவே, இந்த பட வாய்ப்பை விட்டு விடக்கூடாது. நயன்தாரா மாதிரி தானும் பக்தி படத்தில் நடிக்கவே வேண்டும் என்று திரிஷா விரும்புகிறாராம். ஆடி வெள்ளி ரீமேக்கிலும் யானை முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளதாம்.