பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கடந்த 13 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல்... கமல் உடன் வாழ்ந்த கௌதமி, கமலிடமிருந்து விலகுவதாக தன்னுடைய பிளாகில் அறிவித்துள்ளார். கமல்ஹாசனும், நானும் பிரிந்துவிட்டோம் என்ற கௌதமியின் அறிவிப்பு திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே கமல்-கெளதமி இடையேயான பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக ஸ்ருதிஹாசனுக்கும் கௌதமிக்கும் ஒத்துப்போகவில்லை அதனால் தான் கமல்-கவுதமி இடையே பிரிவு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் இதை ஸ்ருதிஹாசன் மறுத்துள்ளார்.
இதுப்பற்றி ஸ்ருதிஹாசன் சார்பில் அவரது செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... ‛‛யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரை பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம்'' என்று கூறியுள்ளார்.