'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா |
ஓகே கண்மணி படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக் நடிப்பது உறுதியாகி விட்டது. அவருக்கு ஜோடியாக முதலில் சாய்பல்லவி நடிப்பதாக இருந்தது. தற்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ் நடிக்கிறார்.
அதிதிராவ் பாலிவுட்டில் டெல்லி 6, ராக்ஸ்டார், மர்டர் 3, பாஸ், படங்களில் படு கவர்ச்சியாக நடித்தவர். 10 வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளிவந்த சிருங்காரம் படத்தில் தேவதாசியாக நடித்தவர் என்பது பலருக்கு தெரியாது. இந்த படம் சிறந்த மாநில மொழி படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு என 3 தேசிய விருதுகளை பெற்றது. சிருங்காரம் படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் இந்திக்கு சென்றவர். அதன் பிறகு தமிழ் பக்கம் திரும்பவில்லை. தற்போது மணிரத்னம் படம் மூலம் மீண்டும் வருகிறார்.
இதன் படப்பிடிப்புகள் மே மாதம் காஷ்மீரில் தொடங்குகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தமிழில் குருதி பூக்கள் என்றும், தெலுங்கில் குருதி புஷ்பம் என்றும் பெயர் வைகக்கப்படலாம் என்று தெரிகிறது.