வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் |

மலையாள சினிமாவின் அடையாளம் மோகன்லால். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். அவர் இயக்கும் முதல் படம் 'பரோஸ்'. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ்வேகா , ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லாலின் நண்பரும் ஆஸ்தான தயாரிப்பாளருமான ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார்.
இந்த படத்தை மோகன்லால் குழந்தைகளை மகிழ்விக்கும் பேண்டசி படமாக உருவாக்கி வருகிறார். குழந்தைகளுடன் அவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், 'மைடியர் குட்டிச்சாத்தான்' படத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் முக்கிய படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 12ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




