நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழில் வெளியான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி, மேல்மருவத்தூர் அற்புதங்கள், பதில் சொல்வாள் பத்ரகாளி, கைகொடுப்பாள் கற்பகாம்பாள் ஆகிய பக்தி படங்களை இயக்கியவர் 'ஓம்சக்தி' ஜெகதீசன். தேவி தரிசனம், தாய்மூகாம்பிகை, சுப்ரபாதம் ஆகிய படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். 95 வயதான அவர் முதுமை காரணமாக நேற்று காலமானார். உடல் இன்று மாலை போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. ஓம் சக்தி ஜெகதீசனுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஒரே தாய் ஒரே குலம், இவர்கள் இந்தியர்கள் ஆகிய சமூக படங்களையும் இயக்கியுள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில், நடுக்கடலில் பயணம் செய்யும் கப்பலில் படமாக்கப்பட்ட 'சிரஞ்சீவி' என்ற படத்தை கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார். டி.வியில் ஒளிபரப்பான 'மகான் ராமானுஜர்' என்ற தொடரை இயக்கியுள்ள இவர், எம்.ஜி.ஆர் நடித்த 'இதயக்கனி' படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். சரத்பாபு, சுமலதா நடித்த 'திசை மாறிய பறவைகள்' என்ற படத்தை இயக்கி, தமிழக அரசின் விருது பெற்றுள்ளார்.