பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
லண்டனில் நடைபெற்று வரும் இந்திய திரைப்பட விழாவில் மணிரத்னத்திற்கு 'ஐகான்' விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் மணிரத்னம் இயக்கி அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா நடித்த 'பாம்பே' படம் திரையிடப்பட்டது. படம் திரையிட்டதற்குப் பின் மணிரத்னம் சிறப்புரையாற்றினார். அப்போது அங்கிருந்த திரைப்படப் பிரமுகர்கள், ரசிகர்கள் முன் உரையாற்றினார். இந்திய சினிமாவைப் பற்றியும், அவருடைய திரையுலக வாழ்க்கை மற்றும் அவர் இணைந்து பணியாற்றிய நட்சத்திரங்களைப் பற்றியும் பேசியுள்ளார்.
மணிரத்னத்துடன் அவருடைய மனைவி சுஹாசினியும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அது பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் தன்னுடைய டிவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட சுஹாசினி கூடவே 'காக்கா முட்டை' படத்தைப் பற்றியும் ஒரு பதிவிட்டிருக்கிறார். “லண்டன் திரைப்பட விழாவில் நேற்றுதான் 'காக்கா முட்டை' படத்தைப் பார்த்தேன். அற்புதமான படம், இளம் திறமைசாலிகள் தமிழ் சினிமாவில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.