2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கன்னடத்தில் நடிகர் சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12, சமீபத்தில் ஆரம்பமானது. பெங்களூருவில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதனிடையே, அந்த ஸ்டுடியோவில் சுற்றுப்புறச் சூழல் விதிகளை கடைபிடிக்கவில்லை என கர்நாடகா மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டுடியோவிற்கு சீல் வைத்தது. அதனால், பிக்பாஸ் போட்டியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
இதன் பின் நடிகர் சுதீப், கேட்டுக் கொண்டதன் பேரில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் சீலை அகற்ற உத்தரவிட்டார். அதையடுத்து 10 நாள் அவகாசம் கொடுத்து நிகழ்ச்சியைத் தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக நின்று போய்விடுமா என்ற அச்சத்தில் இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு சற்றே ஆறுதல் கிடைத்தது.
10 நாட்களுக்குள் அந்த அரங்கில் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி மாற்றி அமைக்க வேண்டும். அதை வாரியம் மேற்பார்வை செய்யும் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் கன்னட திரையுலகம் மற்றும் டிவி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.