பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
சென்னை, விருகம்பாக்கத்தில் தென்னிந்திய சினிமா, சின்னத்திரை டப்பிங் யூனியன் இயங்கி வருகிறது. இதன் தலைவராக நடிகர் ராதாரவி உள்ளார். அரசு விதிமுறைகளை மீறி இந்த கட்டடம் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததால் கடந்த மார்ச் 11ல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக கோர்ட்டை நாடினார் சங்க தலைவர் ராதாரவி.
இந்நிலையில் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளின் பலனாக நீதிமன்ற ஆணையின்படி பொருட்களை எடுக்கவும், இடித்துக் கட்டுவதற்கு விண்ணப்பிக்கவும் இரண்டு வாரங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் முன்னிலையில் அதிகாரிகள் சீல்லை உடைத்து கட்டடத்தை திறந்தனர். எல்லாம் சரி செய்தபின் இந்த அலுவலகம் மீண்டும் டப்பிங் யூனியன் வசம் நிரந்தரமாக ஒப்படைக்கப்படும்.