சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி |

சென்னை, விருகம்பாக்கத்தில் தென்னிந்திய சினிமா, சின்னத்திரை டப்பிங் யூனியன் இயங்கி வருகிறது. இதன் தலைவராக நடிகர் ராதாரவி உள்ளார். அரசு விதிமுறைகளை மீறி இந்த கட்டடம் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததால் கடந்த மார்ச் 11ல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக கோர்ட்டை நாடினார் சங்க தலைவர் ராதாரவி.
இந்நிலையில் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளின் பலனாக நீதிமன்ற ஆணையின்படி பொருட்களை எடுக்கவும், இடித்துக் கட்டுவதற்கு விண்ணப்பிக்கவும் இரண்டு வாரங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் முன்னிலையில் அதிகாரிகள் சீல்லை உடைத்து கட்டடத்தை திறந்தனர். எல்லாம் சரி செய்தபின் இந்த அலுவலகம் மீண்டும் டப்பிங் யூனியன் வசம் நிரந்தரமாக ஒப்படைக்கப்படும்.