பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் |
தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் 1017 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி மற்றும் ராஜேந்திரன், சற்குணம் உள்ளிட்டோர் போட்டியிட்டார்கள். தேர்தலுக்கு பிறகு உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், நடிகர் ராதாரவி 662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணம் 36 வாக்குகளும் பெற்றுள்ளார்கள். இதன் மூலம் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ராதாரவி தலைவராகி இருக்கிறார். மேலும் நடிகர் ராதாரவி மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த போதும், அதை எல்லாம் மீறி அவர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.