நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கம் சென்னையில் உள்ளது. இதன் தலைவராக இடையில் சில ஆண்டுகள் தவிர தொடர்ந்து ராதாரவி இருந்து வருகிறார். ராதாரவி மீது ஏற்கெனவே பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. மீடூ குற்றச்சாட்டுகளும் இருந்தது. இந்த நிலையில் புதிதாக சங்க கட்டிடத்தை கட்ட மாநகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போது சங்க கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராதாரவி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிட விதிமீறல் புகார் எழுந்தபோது நான் பொறுப்பில் இல்லை. அப்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் இப்போது இல்லை. கட்டிடத்துக்கு எனது பெயரை வைக்க முடிவு செய்தபோது வேண்டாம் என்று மறுத்தேன். டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் கட்டியதை எதிர்த்து வழக்கு போட்டதும், வக்கீல் மூலம் கோர்ட்டில் முறையான விளக்கம் அளித்தோம்.
மாநகராட்சி சார்பில் ஒரு மாதத்துக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் வந்து இருக்கலாம். வராமலும் இருக்கலாம். படப்பிடிப்பு உள்ளிட்ட வேறு பணிகளில் நான் தீவிரமாக இருந்ததால் நோட்டீஸ் என் கவனத்துக்கு வரவில்லை. டப்பிங் அலுவலகம் வேறு இடத்தில் தொடர்ந்து செயல்படும். சீல் வைக்கப்பட்ட கட்டடத்தை திறக்க கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருக்கிறோம். டப்பிங் சங்கத்துக்கு என்னை தொடர்ந்து தலைவராக தேர்வு செய்து வருவதால் சிலருக்கு பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் இருக்கிறது. அதன் விளைவாகவே இப்படி நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.