வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.சுவாமிநாதன் தயாரிப்பில், நவீன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கடைசி தோட்டா'. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ராதாரவி கதை கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார், வையாபுரி, கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசை அமைத்துள்ளார், மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் நவீன் குமார் கூறியதாவது : ஒரு நாளில் நடக்க கூடிய மர்மங்கள் நிறைந்த கிரைம் திரில்லர் ஜானரில் படம் தயாராகி உள்ளது. இதில் ராதாரவி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், வனிதா விஜயகுமார் அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷனராகவும் நடித்திருக்கிறார்கள். ஸ்டைலிஷாக நடித்திருக்கும் ராதாரவியை இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தில் பார்க்கலாம். அதேப்போல் வனிதா விஜயகுமாரின் அதிரடியான போலீஸ் வேடமும், அவரது நடிப்பும் நிச்சயம் பேசப்படும். கொடைக்கானல், புதுச்சேரி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.