இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.சுவாமிநாதன் தயாரிப்பில், நவீன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கடைசி தோட்டா'. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ராதாரவி கதை கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார், வையாபுரி, கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசை அமைத்துள்ளார், மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் நவீன் குமார் கூறியதாவது : ஒரு நாளில் நடக்க கூடிய மர்மங்கள் நிறைந்த கிரைம் திரில்லர் ஜானரில் படம் தயாராகி உள்ளது. இதில் ராதாரவி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், வனிதா விஜயகுமார் அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷனராகவும் நடித்திருக்கிறார்கள். ஸ்டைலிஷாக நடித்திருக்கும் ராதாரவியை இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தில் பார்க்கலாம். அதேப்போல் வனிதா விஜயகுமாரின் அதிரடியான போலீஸ் வேடமும், அவரது நடிப்பும் நிச்சயம் பேசப்படும். கொடைக்கானல், புதுச்சேரி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.