இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
விஜய் ஆண்டனி தற்போது 'ரோமியா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயரிலேயே இசை நிகழ்ச்சியும் நடத்த இருக்கிறார். இதற்காக கோவை சென்ற விஜய் ஆண்டனி அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இது தேர்தல் காலம் என்பதால் “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்டதற்கு விஜய் ஆண்டனி அளித்த பதில் வருமாறு:
‛‛நான் வர வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டால் வரலாம். மற்றபடி எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு குடிமகனாக நிச்சயம் ஓட்டு போடுவேன். நீங்களும் ஓட்டுப் போட வேண்டும். நோட்டாவுக்கு போடுவதை விட, யாருக்காவது ஓட்டு போடுங்கள். ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள். கடந்த ஐந்து ஆண்டில் என்ன செய்திருக்கிறார்கள் என ஐந்து நிமிடம் யோசித்து ஓட்டுப் போடுங்கள். சின்ன படமோ, பெரிய படமோ கதை நன்றாக இருந்தால் வெற்றி பெறும்'' என்றார்.