நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
விஜய் ஆண்டனி தற்போது 'ரோமியா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயரிலேயே இசை நிகழ்ச்சியும் நடத்த இருக்கிறார். இதற்காக கோவை சென்ற விஜய் ஆண்டனி அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இது தேர்தல் காலம் என்பதால் “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்டதற்கு விஜய் ஆண்டனி அளித்த பதில் வருமாறு:
‛‛நான் வர வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டால் வரலாம். மற்றபடி எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு குடிமகனாக நிச்சயம் ஓட்டு போடுவேன். நீங்களும் ஓட்டுப் போட வேண்டும். நோட்டாவுக்கு போடுவதை விட, யாருக்காவது ஓட்டு போடுங்கள். ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள். கடந்த ஐந்து ஆண்டில் என்ன செய்திருக்கிறார்கள் என ஐந்து நிமிடம் யோசித்து ஓட்டுப் போடுங்கள். சின்ன படமோ, பெரிய படமோ கதை நன்றாக இருந்தால் வெற்றி பெறும்'' என்றார்.