அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

விஜய் ஆண்டனி தற்போது 'ரோமியா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயரிலேயே இசை நிகழ்ச்சியும் நடத்த இருக்கிறார். இதற்காக கோவை சென்ற விஜய் ஆண்டனி அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இது தேர்தல் காலம் என்பதால் “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்டதற்கு விஜய் ஆண்டனி அளித்த பதில் வருமாறு:
‛‛நான் வர வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டால் வரலாம். மற்றபடி எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு குடிமகனாக நிச்சயம் ஓட்டு போடுவேன். நீங்களும் ஓட்டுப் போட வேண்டும். நோட்டாவுக்கு போடுவதை விட, யாருக்காவது ஓட்டு போடுங்கள். ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள். கடந்த ஐந்து ஆண்டில் என்ன செய்திருக்கிறார்கள் என ஐந்து நிமிடம் யோசித்து ஓட்டுப் போடுங்கள். சின்ன படமோ, பெரிய படமோ கதை நன்றாக இருந்தால் வெற்றி பெறும்'' என்றார்.