அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை தனுஷ் எழுதிய பாடிய ஒரு பாடலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். அதாவது ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் எழுதி பின்னணி பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகள் மிகச் சிறப்பாகவும் எளிமையாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ள கீரவாணி, தனுஷ் எழுதிய அந்த பாடலைப் போலவே நாட்டு நாட்டு பாடலையும் பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியிருக்கிறார் என்று ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்டு அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.