'2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு |
கடந்த மக்களவை தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சட்டசபை தேர்தலுக்கு அக்கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். இப்படி ஏதாவது அரசியல் சம்பந்தமாக அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். அதோடு ஆளும் கட்சிகளின் ஊழல் குறித்தும் கடுமையாக விமர்சிப்பார் மன்சூரலிகான்.
இந்த நிலையில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மன்சூர் அலிகானுக்கு 2,500 சதுர அடியில் உள்ள வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்திருக்கிறார்கள். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் அதற்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.