பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கடந்த மக்களவை தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சட்டசபை தேர்தலுக்கு அக்கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். இப்படி ஏதாவது அரசியல் சம்பந்தமாக அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். அதோடு ஆளும் கட்சிகளின் ஊழல் குறித்தும் கடுமையாக விமர்சிப்பார் மன்சூரலிகான்.
இந்த நிலையில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மன்சூர் அலிகானுக்கு 2,500 சதுர அடியில் உள்ள வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்திருக்கிறார்கள். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் அதற்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.