7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

வட இந்தியாவில் 'யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத்' ஆகிய புண்ணிய தலங்களுக்கு விஜயம் செய்யும் 'சர் தம் யாத்ரா' என்பது பிரபலமான ஒன்று.
நடிகை சமந்தா அந்த 'சர் தம் யாத்ரா'வை கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டியுடன் மேற்கொண்டார்.
தற்போது அந்த யாத்திரையை நிறைவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “ஒரு அற்புதமான யாத்திரை நிறைவு பெற்றது 'சர் தம் யாத்ரா'. ஹிமாலயா மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. மகாபாரதத்தைப் படித்த போது, இந்த உலகின் சொர்க்கமான கடவுள்களின் இருப்பிடமான அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் எதிர்பார்த்தது எல்லாம் நடந்துவிட்டது. எனது இதயத்தில் ஹிமாலயாவுக்கு எப்போதுமே சிறப்பான இடம் உண்டு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த பின் சமந்தா வெளியில் சென்ற முதல் இடம் இது.