நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
வட இந்தியாவில் 'யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத்' ஆகிய புண்ணிய தலங்களுக்கு விஜயம் செய்யும் 'சர் தம் யாத்ரா' என்பது பிரபலமான ஒன்று.
நடிகை சமந்தா அந்த 'சர் தம் யாத்ரா'வை கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டியுடன் மேற்கொண்டார்.
தற்போது அந்த யாத்திரையை நிறைவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “ஒரு அற்புதமான யாத்திரை நிறைவு பெற்றது 'சர் தம் யாத்ரா'. ஹிமாலயா மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. மகாபாரதத்தைப் படித்த போது, இந்த உலகின் சொர்க்கமான கடவுள்களின் இருப்பிடமான அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் எதிர்பார்த்தது எல்லாம் நடந்துவிட்டது. எனது இதயத்தில் ஹிமாலயாவுக்கு எப்போதுமே சிறப்பான இடம் உண்டு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த பின் சமந்தா வெளியில் சென்ற முதல் இடம் இது.