ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சர்வதேச டிவி ஷோவான 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒளிபரப்பை ஆரம்பித்தது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள். சில வாரங்களுக்குப் பிறகு நிகழ்ச்சிக்கு ரேட்டிங் இல்லை என நடிகை தமன்னாவை அந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். இப்போது தமன்னா தெலுங்கு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தமன்னாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பள பாக்கி உள்ளதாலும், தயாரிப்பு நிறுவனத்தின் தொழில்முறையற்ற ஒழுக்கம் காரணமாகவும் அவர்கள் மீது வழக்கு தொடுக்கும் அளவிற்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார். ஒரே இரவிலேயே அவருடனான தொடர்புகளை அவர்கள் துண்டித்துவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.