நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

லவ் ஸ்டோரீஸ் 2 வில் இணைந்து பணியாற்றியபோது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் நட்பாகி காதல் செய்ய தொடங்கினார் தமன்னா. அதன் பிறகு பாலிவுட்டில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டார்கள். அதோடு 2025ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. திடீரென்று காதலர் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்துவிட்டார் தமன்னா. என்றாலும் காதலரை பிரிந்ததற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடத்தில் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்தது ஏன்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, யாராக இருந்தாலும் உறவுகளிடம் பொய் பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பொய் பேசும் நபர்களை நான் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் என்று பதில் கொடுத்து இருக்கிறார் தமன்னா.