வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். தமன்னாவுக்கும் ஹிந்தி நடிகரான விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் வர்மா பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் தமன்னா.
“ஒருவர் உங்களுடன் இணைந்து நடிக்கிறார் என்பதற்காக அவர் மீது நமக்கு ஈர்ப்பு வந்துவிடாது. நான் பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒருவர் யார் மீதாவது காதலில் விழ வேண்டுமென்றால், அந்த ஒருவருக்காக எதையாவது உணர வேண்டும். அது மிகவும் தனிப்பட்ட ஒன்று. அவர்கள் வாழ்க்கைக்காக என்ன செய்கிறார்கள் என்பதும் இதுவும் ஒன்றல்ல. இதற்காக அது நடப்பதில்லை. நான் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். இந்தியாவில் ஒரு பெண் அவரது வாழ்க்கைத் துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். எனது உலகத்தைப் புரிந்து கொண்ட ஒருவர் எனக்குக் கிடைத்துள்ளார். அவரை நான் காக்கிறேன், விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பெல்லாம், விஜய் வர்மா பற்றிய கேள்விகளுக்கு மறுப்பு தெரிவித்து வந்த தமன்னா முதன் முறையாக அவர் பற்றிப் பேசியுள்ளார்.




