பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழில் 1991ல் வெளியான ஈரமான ரோஜாவே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. மிக குறைந்த வயதில் அதாவது 14 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். அதைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். குறிப்பாக மலையாளத்தில் அதிக படங்களில் நடித்த இவர் அங்கே தான் தனக்கு சொந்த ஊர் என்பது போல உணர முடிந்தது என்று அவ்வப்போது கூறுவார். திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்த அவர் பின்னர் தனது கணவரின் தூண்டுதலால் ஒரு சில படங்கள் நடித்தார்.
அப்படி கடைசியாக மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கலெக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகினி. அதன்பிறகு தற்போது 15 வருடம் கழித்து மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மோகினி. இயக்குனர் ஜினு ஆபிரகாம் இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் மோகினி. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக நடிகை மோகினி கூறியுள்ளார்.