லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தமிழில் 1991ல் வெளியான ஈரமான ரோஜாவே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. மிக குறைந்த வயதில் அதாவது 14 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். அதைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். குறிப்பாக மலையாளத்தில் அதிக படங்களில் நடித்த இவர் அங்கே தான் தனக்கு சொந்த ஊர் என்பது போல உணர முடிந்தது என்று அவ்வப்போது கூறுவார். திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்த அவர் பின்னர் தனது கணவரின் தூண்டுதலால் ஒரு சில படங்கள் நடித்தார்.
அப்படி கடைசியாக மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கலெக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகினி. அதன்பிறகு தற்போது 15 வருடம் கழித்து மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மோகினி. இயக்குனர் ஜினு ஆபிரகாம் இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் மோகினி. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக நடிகை மோகினி கூறியுள்ளார்.