மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

தமிழில் 1991ல் வெளியான ஈரமான ரோஜாவே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. மிக குறைந்த வயதில் அதாவது 14 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். அதைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். குறிப்பாக மலையாளத்தில் அதிக படங்களில் நடித்த இவர் அங்கே தான் தனக்கு சொந்த ஊர் என்பது போல உணர முடிந்தது என்று அவ்வப்போது கூறுவார். திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்த அவர் பின்னர் தனது கணவரின் தூண்டுதலால் ஒரு சில படங்கள் நடித்தார்.
அப்படி கடைசியாக மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கலெக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகினி. அதன்பிறகு தற்போது 15 வருடம் கழித்து மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மோகினி. இயக்குனர் ஜினு ஆபிரகாம் இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் மோகினி. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக நடிகை மோகினி கூறியுள்ளார்.




