நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! |
ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனன்யா பான்டே. 'ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதற்கடுத்து 'பதி பத்னி அவுர் ஓ, காலி பீலி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு, ஹிந்தியில் உருவாகி வரும் 'லிகர்' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மும்பையில் அனன்யா வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதனால், செய்திகளில் பரபரப்பாக இடம் பெற்றார்.
இதனிடையே, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் அனன்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்கக்ளாம். ஆனால், போதைப் பொருள் சோதனையை அடுத்து அந்த எண்ணத்தை கைவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து அனன்யா பான்டே சமீபத்தி பேட்டி ஒன்றில், “என்னை முதலில் அந்தப் படத்திற்காக யாரும் தொடர்பு கொள்ளவே இல்லை. அப்புறம் என்னை எப்படி அந்தப் படத்திலிருந்து நீக்க முடியும்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.