சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் |
நடிகர் விஷால் தனது நிச்சயதார்த்தம் முடிந்த பின் சென்னை தி நகர் உள்ள நடிகர் சங்கம் புது கட்டட பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள பிள்ளையார் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அளித்த பேட்டி : இன்று காலை எனக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நடிகர் சங்க புது கட்டட பணிகள் இன்னும் 2 மாதத்தில் முடியும். அதன் திறப்பு விழா நடந்தபின் அடுத்த முகூர்த்ததில் அடுத்த எங்கள் திருமணம் நடக்கும்.
நானும் தன்சிகாவும் இணைந்து நடித்தது இல்லை. ஆனாலும் நடிகர் சங்கம், அதன் பணிகள் எங்களை சேர்த்து வைத்தது. கடவுள் எனக்கு அனுப்பிய தேவதை அவர். இன்று எங்கள் பெயர் பொறித்த மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்தது. இத்தனை ஆண்டுகள் வாழ்த்த பேச்சுலர் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இனி நான் நிறைய மாறுவேன். குறிப்பாக சினிமாவில் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்றார்.
மேலுன் அவர் கூறுகையில், அடுத்த பேச்சிலர் ஆக இருக்கும் சிம்பு, அதர்வா, ஜெய், திரிஷாவுக்கும் நல்ல நேரம் அமைய வேண்டும் என்றார்.