இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

இயக்குனர் சுந்தர். சி தற்போது நடிகை நயன்தாராவை முதன்மை வேடத்தில் வைத்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சுந்தர்.சி அடுத்து நடிகர் கார்த்தியுடன் இணைவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.
இதே கதையில் சுந்தர்.சி மீண்டும் விஷாலை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். ஒரு கதாநாயகியாக நடிக்க ‛டிராகன்' படத்தின் மூலம் பிரபலமான கயாடு லோகரை ஒப்பந்தம் செய்துள்ளனர். மற்றொரு நாயகியாக நடிக்க சில தெலுங்கு சினிமா நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.