நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

இயக்குனர் சுந்தர். சி தற்போது நடிகை நயன்தாராவை முதன்மை வேடத்தில் வைத்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சுந்தர்.சி அடுத்து நடிகர் கார்த்தியுடன் இணைவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.
இதே கதையில் சுந்தர்.சி மீண்டும் விஷாலை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். ஒரு கதாநாயகியாக நடிக்க ‛டிராகன்' படத்தின் மூலம் பிரபலமான கயாடு லோகரை ஒப்பந்தம் செய்துள்ளனர். மற்றொரு நாயகியாக நடிக்க சில தெலுங்கு சினிமா நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.