பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு |

'ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த முடித்துள்ள படம் 'கருப்பு'. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது. இதே நாளில் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூட்டணியில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த 'மத கஜ ராஜா' படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் கார்த்தியை வைத்து தான் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதால் அவருக்கு பதிலாக அடுத்து விஷாலை இயக்கப் போகிறார் சுந்தர்.சி. இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்து அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. தற்போது நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் -2' படம் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நவம்பர் மாதம் விஷால் நடிக்கும் புதிய படத்தை தொடங்குகிறார் சுந்தர்.சி.