இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

'ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த முடித்துள்ள படம் 'கருப்பு'. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது. இதே நாளில் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூட்டணியில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த 'மத கஜ ராஜா' படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் கார்த்தியை வைத்து தான் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதால் அவருக்கு பதிலாக அடுத்து விஷாலை இயக்கப் போகிறார் சுந்தர்.சி. இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்து அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. தற்போது நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் -2' படம் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நவம்பர் மாதம் விஷால் நடிக்கும் புதிய படத்தை தொடங்குகிறார் சுந்தர்.சி.