அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் நடிகை டிம்பிள் ஹயாதி. தமிழில் 'தேவி 2' படத்தில் பிரபு தேவாவுடன், விஷால் ஜோடியாக 'வீரமே வாகை சூடும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் ஷேக்பெட் என்னும் இடத்தில் இருக்கும் அபார்ட்மென்ட்டில் டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் வசித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் கடந்த சில மாதங்களாக பணிப்பெண்ணாக இவர்கள் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண், டிம்பிள் ஹயாதி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அவர் வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே தன்னை அவர் டார்ச்சர் செய்தாகவும், நிர்வாணப்படுத்தி வீடியோ எடுக்க முயற்சித்தாகவும், சரியான உணவு, உடைகூட தரவில்லை. டிம்பிளும், அவரது கணவரும் இணைந்து என்னை அடித்து உதைத்து எனது உடைகளை கிழித்தனர் என்றும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
போலீசார் டிம்பிள் ஹயாதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் டிம்பிள் கைதாகலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.