கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கமாலினி முகர்ஜி. அதற்கு முன்னரே ஹிந்தியிலும் தெலுங்கிலும் நடித்திருந்த இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்து வந்தார். அதேசமயம் கடந்த 2014 ல் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியான கோவிந்துடு அந்தரிவாடலே படத்தில் நடித்த பிறகு தெலுங்கில் இவர் வேறு எதுவும் படங்களில் நடிக்கவே இல்லை. அதன்பிறகு தமிழில் இறைவி, மலையாளத்தில் புலி முருகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிப்பை விட்டு ஒதுங்கி விட்டார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெலுங்கு திரையுலகை விட்டு தான் ஒதுங்குவதற்கு காரணம் தான் கடைசியாக நடித்த கோவிந்துடு அந்தரிவாடலே படம் தான் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் கமாலினி முகர்ஜி.
இதுகுறித்து அவர் கூறும்போது “அந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் நல்லபடியாக தான் நடந்தது. ஆனால் படம் வெளியான போது படத்தில் என் கதாபாத்திரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். படத்திற்கு என்னுடைய கதாபாத்திரம் தேவையில்லை என நினைத்திருந்தால் எடிட்டிங் டேபிளிலேயே அதை நீக்கி இருக்கலாம். எதற்காக இந்த படத்தில் நடித்தோம் என்கிற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தி விட்டது அந்த படம். ஆனால் இதற்கு அந்த படத்தில் நடித்த சக நடிகர்களும் படக்குழுவோ காரணம் இல்லை. அதனால்தான் அதற்கு அடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.