2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கமாலினி முகர்ஜி. அதற்கு முன்னரே ஹிந்தியிலும் தெலுங்கிலும் நடித்திருந்த இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்து வந்தார். அதேசமயம் கடந்த 2014 ல் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியான கோவிந்துடு அந்தரிவாடலே படத்தில் நடித்த பிறகு தெலுங்கில் இவர் வேறு எதுவும் படங்களில் நடிக்கவே இல்லை. அதன்பிறகு தமிழில் இறைவி, மலையாளத்தில் புலி முருகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிப்பை விட்டு ஒதுங்கி விட்டார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெலுங்கு திரையுலகை விட்டு தான் ஒதுங்குவதற்கு காரணம் தான் கடைசியாக நடித்த கோவிந்துடு அந்தரிவாடலே படம் தான் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் கமாலினி முகர்ஜி.
இதுகுறித்து அவர் கூறும்போது “அந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் நல்லபடியாக தான் நடந்தது. ஆனால் படம் வெளியான போது படத்தில் என் கதாபாத்திரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். படத்திற்கு என்னுடைய கதாபாத்திரம் தேவையில்லை என நினைத்திருந்தால் எடிட்டிங் டேபிளிலேயே அதை நீக்கி இருக்கலாம். எதற்காக இந்த படத்தில் நடித்தோம் என்கிற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தி விட்டது அந்த படம். ஆனால் இதற்கு அந்த படத்தில் நடித்த சக நடிகர்களும் படக்குழுவோ காரணம் இல்லை. அதனால்தான் அதற்கு அடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.