காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
விஜயகாந்த் பெரும்பாலும் ஆக்ஷன் அதிரடி படங்களில்தான் நடிப்பார். அவர் நடிக்கும் படங்களில் காமெடிக்கென்று தனி நடிகர்கள் இருப்பார்கள், தனி டிராக் இருக்கும். என்றாலும் விஜயகாந்த் காமெடி நாயகனாக நடித்த படம் 'நானே ராஜா நானே மந்திரி'.
பாலு ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்துடன் ராதிகா, ஜீவிதா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். விஜயகாந்த் ஒரு கிராமத்தின் ஜமீன்தார். படிப்பறிவு இல்லாத காரணத்தில் அவர் செய்யும் காரியங்கள் காமெடியாக இருக்கும். அந்த ஜமீனில் வேலை பார்க்க வருகிறார் ராதிகா. விஜயகாந்தின் காமெடிகளை ரசிக்கும் அவர், அவரையே காதலிக்கவும் ஆரம்பிப்பார். ஆனால் அவருக்கோ அத்தை மகள் ஜீவிதா மீதுதான் காதல். இந்த காதல் காமெடியாக எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் வெளிவந்து ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது.