காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
‛உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ் பிரஸ்மீட்டில் பேசிய டி.ராஜேந்தர் அந்த காலத்தில் படங்களில் நல்ல காமெடி இருந்தது. திறமையான காமெடி நடிகர்கள் இருந்தனர். உயிருள்ளவரை உஷா படத்தில் கூட கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்தனர். அடுத்து நான் இயக்கும் படத்தில் சில காமெடியன்களை அறிமுகப்படுத்த போகிறேன் என்றார்.
இது உண்மைதான் தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் இருக்கிறது. இப்பவெல்லாம் வயிறு வலிக்க ஏன் மனம் விட்டு கூட சிரிக்கிற காமெடி வருவது இல்லை. விவேக், மனோ பாலா போன்றவர்கள் காலமாகிவிட்டார்கள். கவுண்டமணி, செந்தில் நடிப்பது இல்லை. வடிவேலு கதை நாயகனாக நடிப்பதில் ஆர்வம் காண்பிக்கிறார். அவர் காமெடியும் முன்போல இல்லை. சூரி, சந்தானம் ஹீரோ ஆகிவிட்டார்கள். சதீஷ் கூட அந்த வழியில் செல்கிறார்.
கருணாகரன், ரோபோ சங்கர், ரமேஷ் திலக், சாம்ஸ் போன்றவர்கள் தவிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன் பீல்ட் அவுட் ஆகிவிட்டார். இப்போது இருக்கிற பெரிய காமெடியன் யோகிபாபு மட்டுமே. அவரும் பெரிய சிரிப்பை தருவதில்லை. கடந்த சில ஆண்டுகளில் பெயர் சொல்லும் காமெடிகள் உருவாகவில்லை. டி.ஆர்.சொன்னது மாதிரி கோலிவுட்டில் திறமையான காமெடியன்கள், நல்ல காமெடி படங்கள் இல்லாமல் வறட்சியில் தவிக்குது தமிழ் சினிமா என்கிறார்கள்.