Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவிலும் விடாமல் சூட்டிங் : மலையாள "பிக்பாஸ்க்கு" பூட்டு!

20 மே, 2021 - 13:17 IST
எழுத்தின் அளவு:
Malayalam-Biggboss-shooting-set-sealed

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் படப்படிப்பு பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் செட் அமைக்கப்பட்டு நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் இங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆனாலும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்களே பாக்கி உள்ள நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது. தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவியதால், படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும், படப்பிடிப்பில் ஊழியர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார்.

இதையும் மீறி படப்பிடிப்பு நடந்து வந்ததால் நேற்று திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரி ப்ரீத்தி பார்கவி, பூந்தமல்லி தாசில்தார் சங்கர், உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் தலைமையில் சென்ற அரசு அதிகாரிகள் நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை செய்தனர். அப்போது படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்ததை உறுதி செய்தனர்.

அதைத் தொடர்ந்து, படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டனர். மேலும் அங்கு இருந்த நடிகர், நடிகைகளை வெளியேற்றினர். ஷூட்டிங் நடைபெற்ற பிக் பாஸ் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். மேலும் ஷூட்டிங் நடத்திய நிறுவனத்துக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் ஜோடி சேருகிறாரா த்ரிஷா ?பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் ஜோடி ... தடுப்பூசி போட சன்மானம் : சீனுராமசாமி யோசனை தடுப்பூசி போட சன்மானம் : சீனுராமசாமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21 மே, 2021 - 14:39 Report Abuse
கல்யாணராமன் சு. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு லட்சம் என்பதெல்லாம் ஜுஜுபி ... கோடி என்ற கணக்கில்தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கவேண்டும் ....
Rate this:
unmaitamil - seoul,தென் கொரியா
21 மே, 2021 - 11:02 Report Abuse
unmaitamil சினிமாகாரனுக்கும், அரசியல் வாதிகளுக்கும் பணம் ஒன்றே குறி. எவன் செத்தாலும், கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் சினிமாவில் உத்தமர்களாக காட்டிக்கொள்வார்கள். இவர்கள் மனித பண்புள்ளவர்கள் என நினைப்பது மக்களின் குற்றமே .
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
20 மே, 2021 - 14:43 Report Abuse
Sridhar இப்போ இவுங்களுக்கு பிரச்சினையே வேற. லய்வு லய்வு னு சொல்லி ஊற ஏமாத்திட்டு இருந்தவங்க, ஏற்கனவே எடுத்த காட்சிகளை வரும் நாட்களில் காண்பிப்பார்கள். போலீஸ் ஷூட்டிங் ஐ நிறுத்திய நியூஸ் கேரளாவில் இருட்டடிப்பு செய்யப்படும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in