‛சிறகடிக்க ஆசை' டிவி தொடர் நடிகை தற்கொலை | சரவண விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‛டியர் ரதி' | 75வது பிறந்தநாள்: எங்கு இருக்கிறார் ரஜினிகாந்த்? | பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி | பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து |

தென்னிந்திய டப்பிங் யூனியனின் தலைவராக நடிகர் ராதாரவி இருக்கிறார். பொதுச்செயலாளராக கதிரவனும், பொருளாளராக சீனிவாச மூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர். இந்த யூனியன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள 80 அடி சாலையில் உள்ளது. இது அமைந்துள்ள கட்டடம் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகும் ராதாரவி தரப்பில் இருந்து தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையாம். அதனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று தென்னிந்திய டப்பிங் யூனியன் வளாகத்திற்கு சீல் வைத்திருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.