ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி அவர் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் வகையில் சென்னை பாரிமுனையில் அமைச்சர் சேகர்பாபு, மு.க. ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு , நடிகர் யோகி பாபு உள்பட பலர் உடன் இருந்தார்கள்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‛‛முதல்வர் ஸ்டாலின் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரின் வாழ்க்கை பயணமும், அரசியல் பயணமும் ஒன்று தான். படிப்படியாக உயர்ந்து தமிழகத்தின் முதல்வராகி உள்ளார். இது மக்கள் அவருக்கு கொடுத்துள்ள அங்கீகாரம் ஆகும். அவர் நீண்டநாள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.