லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் பூரி ஜெகன்னாத். “பத்ரி, அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி, போக்கிரி, பிசினஸ்மேன், ஐஸ்மார்ட் சங்கர்” உள்ளிட்ட பல தெலுங்குப் படங்களை இயக்கியவர். சிம்பு நடித்த 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. தொடர்ந்து பல தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.
பின்னர் இயக்குனர் பூரியுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டார் சார்மி. பூரி இயக்கிய ஏழு படங்களில் சார்மியும் இணை தயாரிப்பாளர்.
2022ல் பூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த 'லிகர்' படம் படுதோல்வியைத் தழுவியது. கடந்த வருடம் அவர் இயக்கிய 'டபுள் ஐஸ்மார்ட்' படமும் தோல்வியைத் தழுவியது. இதனால், தெலுங்கு நடிகர்கள் யாரும் பூரியின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை.
மீண்டும் வெற்றி கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போது நான்கைந்து கதைகளை எழுதி வைத்திருக்கிறாராம் பூரி. ஆனால், அவர் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் சார்மி இணை தயாரிப்பாளராக இருக்கக்கூடாது என சில நடிகர்கள் 'டிமாண்ட்' வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதனால், பூரி, சார்மி நட்பில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.