Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛அந்த' முயற்சியில் ஈடுபட்ட 28 பேர்: கேரள நடிகை சர்மிளா புது குண்டு

01 செப், 2024 - 04:11 IST
எழுத்தின் அளவு:
Actress-Charmila-levels-sexual-abuse,-assault-allegations-against-producer-Mohan,-director-Hariharan


கேரள திரையுலகில் நடிகைகள் பலர் பலாத்காரம் பிரச்னைகளால் பெரும் சிரமத்திற்குள்ளதானதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மல்லுவுட் நடிகர்கள், இயக்குனர்கள் கலங்கி நிற்கின்றனர். புகார்கள் தொடர்பாக சில வழக்குகளும் பதியப்பட்டு விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த கேரளாவில் பல மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் சர்மிளா என்ற நடிகை பழைய சம்பவத்தை புது குண்டாக தூக்கி போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: 1997ல் ‛அர்ஜூனாவும் அஞ்சு புள்ளைகளும்' என்ற திரைப்படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதற்கென அமைத்திருந்த ஒரு செட்டில் நானும் அமர்ந்திருந்தேன். அப்போது இப்பட தயாரிப்பாளர் எம்.பி.மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை சூழ்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். எனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் உதவியால் தப்பினேன்.

ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை பலாத்காரம் செய்ய வந்தனர். ஓட்டல் ஊழியர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். ' நோ ' என்று கதறியபடி வெளியே ஓடினேன். ஒரு ஆட்டோ டிரைவர் உதவியால் தப்பி வீட்டிற்கு சென்றேன். நான் தப்பித்து விட்டேன் ஆனால் ஏழை நடிகைகள் பலர் இது போன்ற தொல்லையில் இருந்து தப்புவது பெரும் சிரமம். வெளியே சொன்னால் அவமானம், எனது குடும்பத்தினருக்கு பாதிப்பு வரும் என்று அப்போது சொல்லவில்லை.


அந்த ' அட்ஜஸ்மென்ட் '

இது போல் மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது ‛பரினயம்' என்ற திரைப்பட ஷூட்டிங்கின் போது இயக்குனர் ஹரிஹரன், நடிகர் விஷ்ணு என்பவர் மூலம் சர்மிளா அந்த 'அட்ஜஸ்மென்ட் ' பண்ணுவாரான்னு கேட்டார். நான் ‛நோ' சொன்னேன். உடனே படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டேன். பெண்கள் பணியாற்ற முடியாத நிலை கேரள திரையுலகில் உள்ளது. இது போல் 28 பேர் வரை ' அந்த ' முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு நடிகை சர்மிளா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தண்டனையை கோர்ட்டே அறிவிக்கட்டும்: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மம்முட்டி கருத்துதண்டனையை கோர்ட்டே அறிவிக்கட்டும்: ... சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் இத்தனை சண்டை காட்சிகளா? சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
03 செப், 2024 - 11:09 Report Abuse
தாமரை மலர்கிறது நடிப்பதற்காக எப்படிப்பட்ட அட்ஜஸ்ட்டும் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு ஆசைகாட்டி, பின்னர் டகால்டி வேலை காட்டி, பல வருடங்கள் கழித்து பாலியல் சுரண்டல் என்று நடிகைகள் கதறுகிறார்கள். இதற்கு முன்பே மறுத்தால், வேறொரு அட்ஜஸ்ட் செய்கிற நடிகைக்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர், நடிகர்கள் வாய்ப்பு கொடுத்துவிடுகிறார்கள். வேலை மிக எளிதாக இருந்து, கோடிக்கணக்கோர் நடிக்க ரெடியாக இருந்தால், கோடி ரூபாய் சம்பளமாக இருந்தால், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் தனது பங்குக்கு வேட்டையாட ரெடியாவது இயற்கை தான். இதை யாராலும் தடுக்க முடியாது. திரைத்துறையில் உத்தமர் என்பவர் ஒன்றும் செய்யமுடியாதவராக இருப்பார். மற்றபடி யாருமே இல்லை. பால் குடிக்காத பூனையும் கிடையாது, வேட்டையாடாத புலியும் கிடையாது. தயாரிப்பாளர், நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் வெறும் புலி அல்ல. வேட்டையாடும் கழுதைப்புலிகள்.
Rate this:
krishnamurthy - chennai,இந்தியா
03 செப், 2024 - 05:09 Report Abuse
krishnamurthy இவர் சொல்வது உண்மையானால் அந்த நபர்கள் தண்டிக்கப்படவேண்டும். இவர் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க இல்லை என்றல் இவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in