இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வித்யூத் ஜம்வல், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது வரை இதன் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சுமாராக 6 சண்டை காட்சிகள் இடம் பெறுகிறது. சிவகார்த்திகேயனை முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக காட்ட ஏ.ஆர். முருகதாஸ் நிறைய மெனக்கெட்டு வருகின்றார் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.