Advertisement

சிறப்புச்செய்திகள்

என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி

18 நவ, 2025 - 12:26 IST
எழுத்தின் அளவு:
There-are-no-15-days..-only-5-days:-producer-thighten-the-work
Advertisement


கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் விதமாக தயாராகி வரும் படம் 'வா வாத்தியார்'. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்க, ராஜ்கிரண், சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் டிசம்பர் 5ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தாலும் இன்னும் ரிலீஸுக்கு 15 நாட்களே இருக்கும் நிலையில் இந்தப்படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற வேண்டி இருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நலன் குமாரசாமியிடம் 15 நாட்கள் எல்லாம் கொடுக்க முடியாது, ஐந்து நாட்களிலேயே படத்தை முடித்துக் கொடுங்கள். டிசம்பர் 5ல் நான் படத்தை ரிலீஸ் செய்தாக வேண்டும் என கண்டிப்பாக கூறிவிட்டாராம்.

அதற்கு காரணம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மையமாக வைத்து இதன் ஓடிடி விற்பனையையும் ஏற்கனவே நல்ல விலைக்கு அவர் பேசி முடித்து விட்டார் என்பதால் டிசம்பர் 5ல் இந்த படத்தை எப்படியும் வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்தில் ஞானவேல் ராஜா இருக்கிறாராம்.. அதனால் வா வாத்தியார் சொன்ன தேதியில் வெளிவருவார் என எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்புநான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை ... பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in