ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மின்னலே படம் துவங்கி தற்போது வரை மிக அதிக அளவிலான படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து, தனது இசைக்கு, பாடல்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டாரத்தையே பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல பரபரப்பாக அவர் இயங்கவில்லை என்றாலும் செலெக்ட்டிவ்வான படங்களுக்கு தற்போது அவர் இசையமைக்க வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கனடாவுக்கு சென்றிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் அங்கே டோரண்டோவில் லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியை நடத்தினார். இதனை தொடர்ந்து கனடா அரசு அவருக்கு நினைவு பரிசு வழங்கி அவரை கவுரவித்து உள்ளது. இது குறித்த தகவலையும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.
கனடா அரசு வழங்கிய அந்த சான்றிதழில், “உங்களுடைய மறக்க முடியாத பாடல்களாலும் புதுவிதமான இசை பாணியினாலும் நீங்கள் தமிழ் இசையை உலக அளவில் சென்றடைய செய்திருக்கிறீர்கள். அது மட்டுமல்ல, பல புதிய இளம் தலைமுறை கலைஞர்கள் உருவாவதற்கும் தூண்டுதலாக இருந்திருக்கிறீர்கள். டோரண்டோவில் உங்களது வருகை என்பது இசையை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பெருமையான நிகழ்வும் கூட. நீங்கள் இந்த கலையின் மூலமாக ரசிகர்களுக்கு கொண்டுவந்து தந்த மகிழ்ச்சி, உணர்வு மற்றும் கலாசாரம் ஆகியவற்றை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.