கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த 'மின்னலே' என்ற படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதன்பிறகு ஏராளமான ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' படத்திற்கு பிறகு தற்போது 'துருவ நட்சத்திரம், பேட் பாய் கார்த்திக்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், 'ஏஐ தொழில்நுட்பத்தில் மரணம் அடைந்த பாடகர்கள் மலேசியா வாசுதேவன், பவதாரணி உள்ளிட்ட பல பாடகர்களின் குரலைக் மீண்டும் கொண்டு வருகிறார்களே. இது போன்ற முயற்சிகளில் நீங்கள் ஏன் ஈடுபடுவதில்லை' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ''என்னை பொருத்தவரை எப்போதுமே உயிரோடு இருக்கும் பாடகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பேன். எவ்வளவோ பேர் பாடுவதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோன்ற நபர்களுக்கு பாட வாய்ப்பு கொடுத்தால் அவர்களுக்கு பயனாக இருக்கும். அது இல்லாமல் இறந்த போன பாடகர்களின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் கொண்டு வருவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அதன் காரணமாகவே அது போன்று முயற்சிகளில் நான் ஈடுபடுவதில்லை'' என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.