பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த 'மின்னலே' என்ற படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதன்பிறகு ஏராளமான ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' படத்திற்கு பிறகு தற்போது 'துருவ நட்சத்திரம், பேட் பாய் கார்த்திக்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், 'ஏஐ தொழில்நுட்பத்தில் மரணம் அடைந்த பாடகர்கள் மலேசியா வாசுதேவன், பவதாரணி உள்ளிட்ட பல பாடகர்களின் குரலைக் மீண்டும் கொண்டு வருகிறார்களே. இது போன்ற முயற்சிகளில் நீங்கள் ஏன் ஈடுபடுவதில்லை' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ''என்னை பொருத்தவரை எப்போதுமே உயிரோடு இருக்கும் பாடகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பேன். எவ்வளவோ பேர் பாடுவதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோன்ற நபர்களுக்கு பாட வாய்ப்பு கொடுத்தால் அவர்களுக்கு பயனாக இருக்கும். அது இல்லாமல் இறந்த போன பாடகர்களின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் கொண்டு வருவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அதன் காரணமாகவே அது போன்று முயற்சிகளில் நான் ஈடுபடுவதில்லை'' என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.