‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த 'மின்னலே' என்ற படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதன்பிறகு ஏராளமான ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' படத்திற்கு பிறகு தற்போது 'துருவ நட்சத்திரம், பேட் பாய் கார்த்திக்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், 'ஏஐ தொழில்நுட்பத்தில் மரணம் அடைந்த பாடகர்கள் மலேசியா வாசுதேவன், பவதாரணி உள்ளிட்ட பல பாடகர்களின் குரலைக் மீண்டும் கொண்டு வருகிறார்களே. இது போன்ற முயற்சிகளில் நீங்கள் ஏன் ஈடுபடுவதில்லை' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ''என்னை பொருத்தவரை எப்போதுமே உயிரோடு இருக்கும் பாடகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பேன். எவ்வளவோ பேர் பாடுவதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோன்ற நபர்களுக்கு பாட வாய்ப்பு கொடுத்தால் அவர்களுக்கு பயனாக இருக்கும். அது இல்லாமல் இறந்த போன பாடகர்களின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் கொண்டு வருவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அதன் காரணமாகவே அது போன்று முயற்சிகளில் நான் ஈடுபடுவதில்லை'' என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.