ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த 'மின்னலே' என்ற படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதன்பிறகு ஏராளமான ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' படத்திற்கு பிறகு தற்போது 'துருவ நட்சத்திரம், பேட் பாய் கார்த்திக்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், 'ஏஐ தொழில்நுட்பத்தில் மரணம் அடைந்த பாடகர்கள் மலேசியா வாசுதேவன், பவதாரணி உள்ளிட்ட பல பாடகர்களின் குரலைக் மீண்டும் கொண்டு வருகிறார்களே. இது போன்ற முயற்சிகளில் நீங்கள் ஏன் ஈடுபடுவதில்லை' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ''என்னை பொருத்தவரை எப்போதுமே உயிரோடு இருக்கும் பாடகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பேன். எவ்வளவோ பேர் பாடுவதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோன்ற நபர்களுக்கு பாட வாய்ப்பு கொடுத்தால் அவர்களுக்கு பயனாக இருக்கும். அது இல்லாமல் இறந்த போன பாடகர்களின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் கொண்டு வருவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அதன் காரணமாகவே அது போன்று முயற்சிகளில் நான் ஈடுபடுவதில்லை'' என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.