‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு ஒரு வாரத்திற்கு முன்பாக வெளிவந்தது. அதன்பின் படம் பற்றிய வேறு எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் டோலிவுட் வட்டாரங்களில் இந்தப் படம் பற்றி சில தகவல்கள் பரவி வருகின்றன.
முதலில் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றார்கள். ஆனால், தற்போது மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தன்னிடம் தேதிகள் இல்லாததால் பிரியங்கா சோப்ரா நடிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால், மற்ற முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேசி வருகிறார்களாம். ஜான்வி கபூர் நடிப்பது ஏறக்குறைய உறுதி என்கிறார்கள். மற்ற இரண்டு ஹீரோயின்களுக்காக அட்லி குழுவினர் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். விரைவில் அவர்கள் யார் என்பது முடிவு செய்யப்பட்டுவிடுமாம். இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டுமென்பதால் அதற்கேற்றபடி கதாநாயகி தேர்வு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார் என்பது கோலிவுட் தகவல். இந்தப் படம் பற்றிய பேச்சுவார்த்தை ஆரம்பமான உடனேயே அவர்தான் இசை என்று முடிவு செய்துவிட்டார்கள். அனிருத் இந்தப் படத்தில் இடம் பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.