வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி |

அல்லு அர்ஜுன், இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் 4வது முறையாக புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இதுதொடர்பாக இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். இவர்கள் இணைந்த 'அலா வைகுந்தபுரமுலூ' தென்னிந்தியா முழுவதும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது.
இப்போது இணைய உள்ள, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. வலுவான கதை சொல்லல், பிரமாண்டமான காட்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இதுவரை பார்த்த புராண படங்களை மறுவரையறை செய்யும் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பிப்ரவரி 2027ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது. ஏற்கனவே ரன்வீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணம் சினிமா ஆகி வருகிறது. அனுமன் கதை அனிமேசனில் உருவாகி உள்ளது. அல்லு அர்ஜூன் கதை எந்த புராண கதை என்பது பலரின் கேள்வி ஆக உள்ளது.