பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் |
தெலுங்குத் திரையுலகின் மற்றுமொரு பான் இந்தியா ஸ்டார் ஆக இருப்பவர் அல்லு அர்ஜுன். அவரும் பிரபல இயக்குனரான திரிவிக்ரம் சீனிவாஸ் இருவரும் புதிய படம் ஒன்றில் இணைவதாக இருந்தது. 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு இந்தப் படம்தான் ஆரம்பமாகும் என்றார்கள்.
ஆனால், அல்லு அர்ஜுன் திடீரென அட்லி இயக்கத்தில் நடிக்க சம்மதித்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகும் நிலை வரை வந்துவிட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக திரிவிக்ரம், அல்லு ஆர்ஜுன் இணையவிருந்த படம் 'டிராப்' ஆகிவிட்டது, அல்லு அர்ஜுன் மீது திரிவிக்ரம் கோபத்தில் உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
தன் படத்தில் நடிக்க சம்மதித்து, திடீரென அட்லி பக்கம் அவர் போய்விட்டதே திரிவிக்ரமின் கோபத்திற்குக் காரணம் என்கிறார்கள். இருவரும் இணைந்து 'ஜுலாயி, சன் ஆப் சத்தியமூர்த்தி, அலா வைகுந்தபுரம்லோ' ஆகிய படங்களைக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி சற்று முன்னர் எக்ஸ் தளத்தில், “திரிவிக்ரம் காருவின் அடுத்த படங்கள், 'வெங்கடேஷ் மற்றும் ஜுனியர் என்டிஆர் ஆகியோருடன் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மற்றவை அனைத்தும் வெறும் யூகம்தான். திரிவிக்ரம் காருவின் உறுதிப்படுத்தப்பட்ட படங்கள் எவை என்பதை இந்தப் பகுதியில் நான் அறிவிப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் திரிவிக்ரம், அல்லு அர்ஜுன் இணைய உள்ளதாக பேசப்பட்ட படம் உறுதி செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.