கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக்: தமிழில் மட்டும் தோல்வி அடைந்த பாண்டவர்கள் |
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் ஆரம்பமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜுனின் 22வது படமாகவும், அட்லியின் 6வது படமாகவும் தயாராகி வரும் இப்படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிப்பதாகக் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
படத்தில் மற்ற கதாநாயகிகளாக மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோரும் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் உண்டு. இன்று முதல் அல்லு அர்ஜுன், மிருணாள் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். தீபிகா படுகோனே ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.
சரித்திர காலம் மற்றும் இந்தக் காலம் கலந்து உருவாக்கப்பட்டுள்ள பேன்டஸி டைப் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'புஷ்பா 2' படத்தின் மூலம் அல்லு அர்ஜுனும், 'ஜவான்' படத்தின் மூலம் அட்லியும் 1000 கோடி கிளப்பில் உள்ளனர். இருவரும் இணையும் இந்தப் படம் எத்தனை கோடி கிளப்பில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.