நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் ஆரம்பமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜுனின் 22வது படமாகவும், அட்லியின் 6வது படமாகவும் தயாராகி வரும் இப்படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிப்பதாகக் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
படத்தில் மற்ற கதாநாயகிகளாக மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோரும் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் உண்டு. இன்று முதல் அல்லு அர்ஜுன், மிருணாள் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். தீபிகா படுகோனே ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.
சரித்திர காலம் மற்றும் இந்தக் காலம் கலந்து உருவாக்கப்பட்டுள்ள பேன்டஸி டைப் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'புஷ்பா 2' படத்தின் மூலம் அல்லு அர்ஜுனும், 'ஜவான்' படத்தின் மூலம் அட்லியும் 1000 கோடி கிளப்பில் உள்ளனர். இருவரும் இணையும் இந்தப் படம் எத்தனை கோடி கிளப்பில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.