கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் ஆரம்பமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜுனின் 22வது படமாகவும், அட்லியின் 6வது படமாகவும் தயாராகி வரும் இப்படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிப்பதாகக் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
படத்தில் மற்ற கதாநாயகிகளாக மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோரும் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் உண்டு. இன்று முதல் அல்லு அர்ஜுன், மிருணாள் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். தீபிகா படுகோனே ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.
சரித்திர காலம் மற்றும் இந்தக் காலம் கலந்து உருவாக்கப்பட்டுள்ள பேன்டஸி டைப் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'புஷ்பா 2' படத்தின் மூலம் அல்லு அர்ஜுனும், 'ஜவான்' படத்தின் மூலம் அட்லியும் 1000 கோடி கிளப்பில் உள்ளனர். இருவரும் இணையும் இந்தப் படம் எத்தனை கோடி கிளப்பில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.