உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! | 'லீடர்' ஆக மாறும் லெஜண்ட் சரவணன் ! | நானி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறாரா தமன்னா? | ஜீவாவிற்கு திருப்புமுனையாக அமைந்த 'தலைவர் தம்பி தலைமையில்' | வெறுப்புணர்வு உங்களை குருடாக்கியது: ஏ.ஆர்.ரஹ்மான் மீது கங்கனா பகீர் குற்றச்சாட்டு | முதன்முறையாக மலையாள படத்திற்கு இசையமைத்துள்ள சங்கர், எஷான், லாய் | 'மாநாடு' படத்தில் நடிக்க மறுத்தேன் ; சிவகார்த்திகேயன் சொன்ன புது தகவல் | மூன்று வருடங்களுக்குப் பிறகு 'ஆசை'யுடன் வெள்ளித்திரைக்கு திரும்பும் கதிர் | கார் பயணத்தின் போது 20 வருடங்களாக இந்த இரண்டு விஷயங்களை கவனமாக தவிர்க்கும் விவேக் ஓபராய் |

சமீபத்தில் தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக கண்ணப்பா திரைப்படம் வெளியானது. நடிகர் விஷ்ணு மஞ்சு கதையின் நாயகனாக நடிக்க, மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் உள்ளிட்ட பிற மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முகேஷ் குமார் சிங் இயக்க, நடிகர் மோகன் பாபு தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஹிந்தி பதிப்பிற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஞ்சுவிடம் நீங்கள் ஏன் ஹிந்தி படங்களில் நடிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த விஷ்ணு மஞ்சு, “எனக்கு ஹிந்தி படத்தில் இருந்து பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை எல்லாமே நான் உற்சாகத்துடன் ஏற்கும் விதமான கதாபாத்திரங்களாக இல்லை. அது மட்டுமல்ல எனக்கென்று ஒரு சிறிய அளவில் இருக்கும் ரசிகர் வட்டத்தை நான் ஏமாற்றவும் விரும்பவில்லை. முக்கிய கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்புகிறேன். நடிகர் அஜித் குமார் கூட சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கானுடன் இணைந்து அசோகா என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனக்கே அது அதிர்ச்சியாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் இருந்தது.
ஒரு முறை அஜித்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவரிடம் அண்ணா நீங்கள் இப்படி சின்ன கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு ஏமாற்றம் தந்தது என்று கூறினேன். ஆனால் அவர் அதற்கு பதில் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் அமைதியாக இருந்து விட்டார். அவர் போல அவ்வளவு பெரிய மனதுடன் கிடைத்த கதாபாத்திரங்களில் நடிப்பது என்னால் முடியாது. அதையும் மீறி என்னை உற்சாகப்படுத்தும் கதையும் கதாபாத்திரங்களும் கிடைத்தால், நான் சுயநலமாக இருக்க மாட்டேன் இருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.




