பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் |
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ என்ற படம் ஜூலை நான்காம் தேதியான நாளை வெளியாகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அப்படத்திற்கான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் ராம். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போது மாரி செல்வராஜ் இயக்கி உள்ள பைசன் படம் குறித்தது ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறும்போது, ‛‛மாரி செல்வராஜனின் வெற்றி என்னுடைய வெற்றிதான். இது எங்களது குழுவின் வெற்றி. என்றாலும் அவரது இந்த வெற்றி போதாது என்றுதான் சொல்லுவேன். அவர் பான் இந்தியா இயக்குனராக வேண்டும். அதற்கான அனைத்து தகுதியும் அவரிடத்தில் உள்ளது. பாரதிராஜாவுக்கு பிறகு அதிவேகமாக படம் எடுக்கக் கூடியவர் என்றால் அது மாரி செல்வராஜ்தான். அவரது முதல் படமான பரியேறும் பெருமாள் எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்த நிலையில், பின்னர் வாழை படம் அதைவிட பிடித்தது.
ஆனால் இப்போது பைசன் படத்தை பார்த்த பிறகு வாழையை விட இந்த படம் என்னை அதிகமாக கவர்ந்துள்ளது. அந்த அளவுக்கு இந்த படத்தில் சிக்கலான உணர்வுகளை கதாபாத்திரங்களாக வைத்து மிக நேர்த்தியாக படத்தை இயக்கியிருக்கிறார். எதிர்காலத்தில் மாரி செல்வராஜ் பான் இந்தியா இயக்குனராகி ஷாருக்கான், அமீர்கான் போன்றவர்களை இயக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று தெரிவித்திருக்கிறார் ராம்.