AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
சின்னத்திரை நடிகரான வெற்றி வசந்த் 'சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார். அவர் நடித்து வரும் முத்து கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அவரது அடையாளமாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு மக்களால் நேசிக்கப்படும் வெற்றி வசந்த், சக நடிகையான வைஷ்ணவியை காதலித்து வந்தார். இருவருக்கும் அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. அடுத்த தீபாவளிக்கெல்லாம் தலை தீபாவளி கொண்டாட ஆயத்தமாகும் வெற்றி வசந்த் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னால் மறக்க முடியாத தீபாவளி குறித்து கூறியுள்ளார்.
அதில், ''நான் எப்போதுமே என் அப்பாவுடன் தான் படம் பார்க்க செல்வேன். தனியாக செல்ல அப்பா அனுமதிக்க மாட்டார். அப்படியிருக்க கத்தி படம் ரிலீஸான தீபாவளி அன்று தான் முதன்முதலில் தனியாக படத்திற்கு செல்ல அப்பாவிடம் பயத்துடன் அனுமதி கேட்டேன். அப்பாவும் அப்போது அனுமதித்துவிட்டார். அதன்பிறகு பல முறை சினிமாவிற்கு தனியாக சென்றிருந்தாலும், கத்தி பட தீபாவளி தான் என்னால் மறக்க முடியாத தீபாவளி' என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் வெற்றி வசந்துக்கு தனது தந்தையின் மேல் இவ்வளவு பயபக்தியா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.