நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
கமல்ஹாசன் அரசியல் கட்சி நடத்தினாலும், சினிமாவிலும் பிஸியாக இருக்கிறார். தக் லைப் படத்தை முடித்துவிட்டார். அடுத்து இந்தியன் 3யில் எஞ்சியுள்ள காட்சிகளில் நடிக்க போகிறார். இதுதவிர சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது அவரது 237வது படம்.
சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை செய்தவர் கமல், மவுன படம், டிடிஎஸ் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் சினிமா என சினிமாவின் அடுத்த கட்டத்தை அவரே முன்னெடுத்திருக்கிறார். மக்கள் இன்னும் 10 ஆண்டுகளில் செல்போனில் படம் பார்ப்பார்கள் என்று அவர் சொன்னபோது யாரும் நம்பவில்லை. இப்போது அது நடந்திருக்கிறது.
இனி அடுத்தகட்டமான ஏஐ தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இது குறித்து கற்றுக்கொள்ள அமெரிக்கா சென்று வந்தார். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடந்து வரும் சினிமா தொடர்பான சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி என்ன செய்யலாம் என்று கமல்ஹாசன் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.