பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

1983ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இயக்குனர் ஏ.ஜெகன்னாதன் இயக்கிய இரண்டு படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. முதல் படம் 'தங்கமகன்'. ரஜினி, பூர்ணிமா பாக்யராஜ், ஜெய்சங்கர், சில்க் ஸ்மிதா நடித்திருந்தனர். பெரும் வெற்றி பெற்ற இந்த படம் மதுரையில் மட்டும் வெள்ளிவிழா கொண்டாடியது.
இன்னொரு படம் சிவாஜி நடித்த 'வெள்ளை ரோஜா'. இதில் சிவாஜி கிறிஸ்தவ பாதிரியார், போலீஸ் அதிகாரி என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். பிரபு, ராதா, அம்பிகா ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படமும் 100 நாள் ஓடியது.
இதே தீபாவளியன்று கமல்ஹாசன் நடித்த 'தூங்காதே தம்பி தூங்காதே' வெளிவந்தது. ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ராதா, சுலக்ஷனா உள்பட பலர் நடித்திருந்தார்கள். கமல் இரண்டு வேடத்தில் நடித்திருந்த இந்த படமும் வெற்றி பெற்றது.
இது தவிர டி.ராஜேந்தர் இயக்கிய 'தங்கைக்கோர் கீதம்' படம் வெளியானது. இதில் சிவகுமார், டி.ரஜேந்தர், ஆனந்த பாபு, நளினி நடித்திருந்தார்கள். இதுவும் 100 நாள் படமாக அமைந்தது.
இதுதவிர சுஹாசினி, ராதா, ஊர்வசி நடித்த 'அபூர்வ சகோதரிகள்' என்ற படமும் வெளியானது. ஆர்.தியாகராஜன் இயக்கிய இந்த படமும் வரவேற்பை பெற்றது.