படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் |
மலையாள சினிமாவின் ஆளுமைகளான மோகன்லாலும், மம்முட்டியும் நெருக்கமான நண்பர்கள். தற்போது உடல்நலம் குறைவாக இருக்கும் மம்முட்டி குணமடைய வேண்டும் என மோகன்லால் சபரிமலைக்கு சென்று வேண்டுதல் செய்தார். இந்த தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தனது 'எம்புரான்' பட புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த மோகன்லாலிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது "மம்முட்டிக்காக நான் சபரிமலையில் பூஜை செய்ததில் என்ன தவறு. நண்பனுக்காக வேண்டிக்கொண்ட தகவலை வெளியிடத் தேவையில்லை, அது தனிப்பட்ட விஷயம். ஆனால் இந்த தகவலை திருவிதாங்கூர் தேவசம் போர்டை சேர்ந்தவர்கள் தான் வெளியிட்டனர்" என்று கூறினார்.
இதனை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மறுத்துள்ளது. இது குறித்து தேவசம் போர்டு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சபரிமலையில் பூஜை நடத்தும்போது அதற்கான அசல் ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். முகம்மது குட்டி என்ற பெயரில் மோகன்லாலுக்காக பூஜை நடத்திய நபரிடம் அசல் ரசீது கொடுக்கப்பட்டது.
அந்த ரசீது தான் பத்திரிகைகளில் வெளியானது. தேவசம் போர்டை சேர்ந்த யாரும் இந்த ரசீதை வெளியிடவில்லை. மோகன்லால் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளார். அவர் உண்மையை புரிந்து கொண்டு தனது நிலைப்பாட்டை திருத்தி கொள்வார் என்று கருதுகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.